search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடைக்கானல் தொடர் மழை"

    கொடைக்கானலில் தொடர் மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    பெருமாள்மலை:

    கொடைக்கானலில் கோடை மழை பெய்ததால் மீண்டும் பசுமையாக காட்சி அளிக்க தொடங்கி உள்ளது. கோடை சீசனில் அக்னி நட்சத்திரத்திலும் மழை பெய்ததால் குளிர்ச்சியாக காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்திருந்து குளுகுளு சீசனை அனுபவித்து சென்றனர்.

    தற்போது சீசன் முடிந்துள்ளதால் கேரள பகுதியில் இருந்து மட்டும் கல்லூரி மாணவர்கள் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு வாரமாகவே கொடைக்கானலில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிய அருவிகள் உருவாகி உள்ளது. மேலும் வட்டகானல், வெள்ளி நீர்வீழ்ச்சி ஆகியவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் விவசாயிகள் உருளைகிழங்கு, பீன்ஸ், காளிப்பிளவர், சவ்சவ், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டிருந்தனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் அவை அனைத்தும் செழித்து வளர தொடங்கி உள்ளது. மேலும் நகர் பகுதிக்கு நீர் ஆதாரமாக உள்ள நகராட்சி நீர்தேக்கம் மற்றும் மனோரஞ்சிம் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இதனால் கொடைக்கானல் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதமான சீதோசனம் நிலவி வருவதால் வார விடுமுறையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பெருமாள்மலை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த வருடம் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதனால் லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக லாட்ஜ் மற்றும் ஓட்டல்களில் கட்டணமும் உயர்த்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

    இந்த வருடம் கோடை மழை கைகொடுத்ததால் வெள்ளிநீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் புதுஅருவிகள் உருவானது காண்பவரை வெகுவாக ஈர்த்தது.

    கடந்த 2 நாட்களாகவே நகர்பகுதியில் சாரல்மழை பெய்தது. நேற்று பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து சாரலாக ஆரம்பித்து கனமழை பெய்தது. இதனால் நகராட்சி நீர்தேக்கம், மனோரஞ்சிதம் உள்ளிட்ட இடங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது நகர்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு ஓரளவு தீர்வு காணப்பட்டுள்ளது.

    இந்த மழை தொடர்ந்து பெய்துவரும் பட்சத்தில் விவசாயத்தை நம்பியுள்ள மக்களுக்கு ஏதுவாக இருக்கும். இந்த மழையை நம்பி விவசாயிகள் கேரட், பீன்ஸ், உருளைகிழங்கு, முட்டைகோஸ், சவ்சவ் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் காய்கறிகள் செழித்து வளரதொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×